ஆவடி: பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மாநகர பஸ் டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநின்றவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி போர்டு வள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (50). இவர், மாநகர போக்குவரத்து கழகத்தின் சென்னை அண்ணாநகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜசேகரன் பணியில் இருந்தபோது, இவர் ஓட்டிச் சென்ற மாநகர பஸ், பைக் மீது மோதி ஒரு வாலிபர் இறந்தார். இதையடுத்து, மாநகர போக்குவரத்து கழகம், டிரைவர் ராஜசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன், நேற்று காலை திருநின்றவூர், சிடிஎச் சாலையில், தனியார் கம்பெனி அருகில் இறந்து கிடந்தார்.