சென்னை: சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு, அண்ணாநகர், சிடிஎச் சாலையை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சரளா. இவர்களது மகன் மனோ (15). இவன், இதே பகுதி ராஜிவ்காந்தி நகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை மனோ பள்ளிக்கு சென்றுள்ளான். மதியம் பள்ளி முதல்வர் சரவணன் (32), மாணவன் மனோவை அழைத்துள்ளார். அதன்பிறகு அவனிடம் பள்ளிக்கு ஏன் சரியாக வருவதில்லை. தலைமுடியை வெட்ட மாட்டாயா எனக் கூறி பிரம்பால் சரமாரி அடித்துள்ளார். இதில் மனோவின் தோள்பட்டை, தொடை பகுதியில் தழும்பு ஏற்பட்டது. மாலை வீடு திரும்பிய மனோ, தனது தாய் சரளாவிடம் நடந்ததை கூறி அழுதான்.
இதையடுத்து, அப்பகுதி மக்களுடன் தாய் சரளா, பள்ளியை முற்றுகையிட்டார். பின்னர் அவர்கள் பள்ளி முதல்வர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.