சென்னை: சத்துணவு மையங்களை மூடுவதை தவிர்க்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொருளாளர் பேயத்தேவன் கூறியதாவது: தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் என்ற பெயரில் ஊழியர்களை அரசு ஏமாற்றி வருகிறது. எனவே, ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.