அடுக்குமாடி குடியிருப்பில் தீ

சென்னை: தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரமேஷ் (28). தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை இவரது வீட்டில் திடீரென தீ விபத்து எற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த டிவி, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தேனாம்ேபட்டை போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: