சென்னை: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்க நிகழ்ச்சி, கோயம்பேட்டில் நேற்று நடைபெற்றது.சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை இணைந்து கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் பேரிடர் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பேரிடர் குறைப்பு தினத்தை அனுசரித்து பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.