சென்னை: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜீவமணி (36). ஆட்டோ டிரைவரான இவர், ஏற்கனவே திருமணமான லட்சுமி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லட்சுமி முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன் ஜீவமணியுடன் வாழ்ந்து வந்தார். லட்சுமி அனைவரிடமும் சகஜமான பேசக்கூடியவர் என்று கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் நடத்தையில் ஜீவமணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து, லட்சுமியை அடித்து உதைத்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கணவன், மனைவி இடையே மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜீவமணி, லட்சுமியை சரமாரி தாக்கி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வலி தங்க முடியாமல் லட்சுமி அலறி துடித்தார். பிறகு அருகில் இருந்தவர்கள் லட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 70 விழுக்காடு தீக்காயங்களுடன் லட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.