சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்திப்புகள் நேற்று மதியம் கோவளத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பியது மாமல்லபுரம். கோவளம் ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடியை, சீன அதிபர் ஜின்பிங் நேற்று காலை கோவளத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், கோவளத்தில் தங்கி உள்ள பிரதமர் மோடியை சந்திக்க நேற்று காலை கிண்டியில் இருந்து காரில் புறப்பட்டார். பள்ளி குழந்தைகள் சாலையின் இருபுறமும் நின்று இந்திய, சீன கொடிகளை அசைத்து வரவேற்பு தெரிவித்தனர். நேற்று மதியம் நிகழ்ச்சிகள் கோளத்தில் நிறைவடைந்தது. சீன அதிபர் கோவளத்தில் இருந்து 1.00 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் சென்றடைந்தார்.