உலகையே திரும்பி பார்க்க வைத்த காஞ்சிபுரம்

கோயில்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீரில் இருந்து வெளியில் வந்த அத்திவரதரால் கடந்த மாதம் காஞ்சிபுரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சீன அதிபர் அதே காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்திருப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழகத்துக்கு 63 ஆண்டுகளுக்கு பிறகு சீன நாட்டின் அதிபர் வந்திருப்பது மாமல்லபுரத்தின் வரலாற்று பெருமைகளை உலகமே அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

Related Stories: