புதுடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமினை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில், மத்தியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின்போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி அளித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறை மனுவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
- மேக்சிஸ்
- கார்த்தி சிதம்பரம். ஏர்செல்
- தில்லி உயர் நீதிமன்றம்
- பி சிதம்பரம்
- கார்த்தி சிதம்பரம்
- அமலாக்கத் துறை