சென்னை: எழுத்துத் தேர்வு நடத்தாமல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு, பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 300 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அறிவிப்பாணையில், அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், எழுத்து தேர்வு நடத்தாமல் நேர்முக தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிறபிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்டவிரோதமானது.