டெல்லி: போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 2018-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து பயிற்சி எடுத்துவரும் 126 இளம் அதிகாரிகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாடிய பிரதமர் மோடி, குற்றங்களை தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், நவீன காவல்துறையை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை முன்னிலை படுத்துவதிலும் போலீசார் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.