ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் 3வது தெருவில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பாக அமைக்கப்பட்ட தொட்டி உடைந்து கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் தொட்டியினை மாற்றி தரும்படி இந்த பகுதியில் உள்ள மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி 177வது வட்ட மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் மனுகொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.