சென்னை: மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் அண்ணன் மாதையன் (71). கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேட்டூர், கருமலைக்கூடலில் உள்ள தனது மகள் ஜெயம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மாதையன் தரப்பில் பரோல் கேட்டு அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் மாதையனின் மகள் ஜெயம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். மனுவில், 1987ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் தந்தை மாதையன் சிறையில் உள்ளார். 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர், முன்கூட்டியே விடுதலை பெற தகுதி இருந்தும், அரசு அவரை விடுதலை செய்யவில்லை.