சென்னை: கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. வடமாநிலத்தவர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வாடகைக்கு குடிருயிக்கின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்புக்கு நேற்று முன்தினம் மாலை 2 நைஜீரிய வாலிபர்கள் வந்து, வாடகைக்கு வீடு கிடைக்குமா என காவலாளியிடம் கேட்டுள்ளனர். அவர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகியிடம் கேட்குமாறு கூறி, உள்ளே அனுப்பி வைத்தார். அங்கு, ஆறுமுகம் என்பவரை சந்தித்து கேட்டுள்ளனர். ‘உங்களது பாஸ்போர்ட், விசா விவரங்களை தந்தததால், உங்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஆறுமுகம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், ‘பாஸ்போர்ட் இல்லை என்றும், இங்கு ஒரு கல்லூரியில் படிப்பதாகவும், பகுதி நேர வேலை செய்வதாகவும் முரணாக கூறினர்.இதனால், சந்தேகமடைந்த ஆறுமுகம், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தார்.