மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 4 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் அனிதா, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், அரியலூருக்கும், கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் சென்னை  பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராகவும் (மின் ஆளுமை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு கல்வி அலுவலர் ரமேஷ் பதவி உயர்வு மூலம் திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை(கிழக்கு) மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி பதவி உயர்வு மூலம் கடலூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் பதவி உயர்வு மூலம் தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: