சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடியாக திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவை, 1,300 அடியாக ஆந்திர அரசு திடீரென நேற்று முன்தினம் குறைத்துள்ளது. இதனால், பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 582 கன அடியாக குறைந்தது. தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாயில் ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீருக்காக, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கடந்த 25ம் தேதி காலை 10.30 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.