ஜோலார்பேட்டை: சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை 12ம் தேதி முதல் ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஜூலை 23ல் இருந்து கூடுதலாக 2வது ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் என தினசரி 50 லட்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பணி நேற்றுடன் 159வது முறையாக என சுமார் 40 கோடி லிட்டர் தண்ணீர் வந்துள்ளது.