சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு சார்பில் சென்னையில் குடிசை பகுதியில் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் காவல் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வரும் இந்த பிரிவினருக்கு அம்மா பேட்ரோல் என்னும் வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் கல்லூரிகள், அலுவலகங்களில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிசை பகுதிகளை சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தை துவங்கியுள்ளனர்.