ஓசூர்: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1288 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. நேற்று 1306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 1288 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 1288 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. முழுகொள்ளளவான 44.20 அடியில் தற்போது 41.82 அடி தண்ணீர் உள்ளது.