சென்னை: அமமுக நிர்வாகி புகழேந்தி உடனடியாக அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை புகழேந்தி நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கோவை மண்டல அமமுக கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். அமமுக கட்சியை டிடிவி தினகரன் நாசம் செய்துவிட்டார்; கட்சியை நாசம் செய்த டிடிவி தினகரன் தலைமையில் செய்ல்பட முடியாது என புகழேந்தி கூறினார். எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்தவர்கள் எதிர்காலம் தினகரனால் கேள்விக்குறியானது.