சென்னை: உடல் நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு தலைமைக் காவலர் ரஜினிகாந்த், தஞ்சாவூர் வட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் காசியய்யா, வேலூர் மேல்பட்டி உதவி ஆய்வாளர் சீனிவாசன், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் சந்திரசேகர், பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், விருதுநகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருப்பதி, மல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் பழனி செல்வ பாரதி, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி; அரியலூர் மீன்சுருட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் குமார், மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலர் பிச்சையம்மாள்,நாகை வேளாங்கண்ணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், வாய்மேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணையன், தூத்துக்குடி கயத்தார் காவல் நிலைய தலைமைக் காவலர் இராஜமாரி, சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிபு சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஓமலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், சென்னை பெருநகர காவல், கோட்டூர்புரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜானகிராமன், திருச்சி ஆயுதப்படை தலைமைக் காவலர் வந்த அசோக் குமார், கொள்ளிடம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜா, புதுக்கோட்டை ஆலங்குடி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கோதண்டபாணி, கன்னியாகுமரி ஈத்தாமொழி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.