குளித்தலை: கரூர் அருகே மர்மகாய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் நேற்று இறந்தன.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆதனூரை சேர்ந்தவர் செல்வகுமார். பொக்லைன் டிரைவர். இவரது மகள் ரசிகாஜாய் (3). சிறுமிக்கு கடந்த 1ம் தேதி முதல் மர்மகாய்ச்சல் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாள். இதேபோல் தோகைமலை அடுத்த குன்னா கவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் ரித்தீஷ் (4). சிறுவனுக்கு கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். நேற்று ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்தான். தோகைமலையில் ஒரேநாளில் இரண்டு குழந்தைகள் மர்மகாய்ச்சலுக்கு இறந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.