பேருந்து நிலையங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ஆகியவை அக்டோபர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: