சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை விட்டு பிரிந்த பெண் குட்டி யானை மீட்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை விட்டு பிரிந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த காப்பகத்தில், நேற்று முன்தினம் இரவு தாய் யானையிடம் இருந்து பிரிந்த சுமார் மூன்று மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தவித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் குட்டியை மீட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தனர். குட்டியை பரிசோதித்த டாக்டர் அசோகன், நல்ல உடல் நிலையில் உள்ளதாகவும், உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று குட்டி யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: