ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை ஏரியை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து ஆவடி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீனத், பிரீத்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிருந்தாவன் நகர் பகுதியில் தனியார் சிலர், ஏரியை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டப்பட்டும், எல்லை கற்களை அமைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டுவந்து அவற்றை இடித்து தள்ளினர். எல்லை கற்களையும் அப்புறப்படுத்தினர்.