சென்னை: ராதாபுரம் தேர்தல் வழக்கில் வாக்குகள் மறு எண்ணிக்கைக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி அதிமுகவின் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னதாக திமுகவின் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.