சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரகர்கள் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வீ, தமிழகத்தை சேர்ந்த வேதாச்சலத்தை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆள்மாறாட்ட வழக்கு குறித்து தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் விவரங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், உதித்சூர்யா, ராகுல், பிரவீன், இர்பான் மட்டுமே மோசடியில் ஈடுபட்டது இதுவரை உறு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.