தாம்பரம்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, தாம்பரம் நகராட்சியில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.சேலையூர் மற்றும் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது. இதில், சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மகளிர் குழுவினர், கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.