சாலையோர மரத்தில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் ஓட்டம்

தண்டையார்பேட்டை:சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று 20 அடி நீளமுள்ள கன்டெய்னரை ஏற்றிக்கொண்டு எண்ணூருக்கு புறப்பட்டது. ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் சென்டர் மீடியனில் மோதாமல் இருக்க லாரி சாலையோரமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் லாரி மோதி கன்டெய்னர் பெட்டி சாய்ந்தது. இதனால் டிரைவர் லாரியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்ததும் ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதையடுத்து வந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, கிரேன் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் பெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: