சென்னை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், லஞ்ச ஊழிப்பு ஆணையர் மோகன் பியாரே ஓய்வுபெற்றதை தொடர்ந்து, தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த கே.சத்யகோபால் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகன் பியாரே ஆகியோர் நேற்று ஓய்வு பெற்றனர். இதையடுத்து சத்யகோபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.வருவாய் நிர்வாக ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சத்யகோபால், தமிழகம் முழுவதும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மற்றும் வெள்ளம் போன்ற பெரிய ஆபத்துக்களை வரும்முன் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.