கொல்கத்தா: மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா; ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பா.ஜ.,வின் முதல் தலைவர் எஸ்பி முகர்ஜி வலியுறுத்தினார். அவர் மே.வங்க மாநிலத்திற்காக கடுமையாக உழைத்தார். அவரின் கனவை மோடி நினைவாக்கினார். எத்தனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்தாலும், மேற்குவங்கத்தில் , தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) பாஜக அரசு கொண்டுவந்தே தீரும் என கூறினார். இந்து, சீக்கியம், ஜெயின், புத்தம், கிறிஸ்தவத்தைச் சேர்ந்த சட்ட விரோத குடியேறிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறேன்.