சென்னை: மேதகு என்பதை விட சகோதரி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.சென்னை பொது நல சங்கம் சார்பில் தெலங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாமக தலைவர் ஜி.கே.மணி, சமக தலைவர் சரத்குமார், தமாகா மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பாராட்டு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:மேதகு என்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். தமிழக மக்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ந்து சந்திக்க முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன். மேதகு என்பது வெறும் பதவி சொல் தான். அரசியலில் அக்கா என்ற சொல் எனக்காகவே அமைந்தது போல் ஆகிவிட்டது.