சென்னை: ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள அறிவிக்கை:ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப்படிப்புகளும் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை மற்றும் சென்னையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் பள்ளிகளில் 2019-20ம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப் படிப்புகளில் பயில மேல்நிலைப்பள்ளி தேர்வில் முதன் முறையாகவே அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.