புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பொது மன்னிப்பின் கீழ் தகுதியுடைய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2018 அக்டோபர் 2 முதல் 2019 ஏப்ரல் 6 வரை நாடு முழுவதும் 1,424 கைதிகள், விடுவிக்கப்பட்டனர். 3வது கட்டமாக வரும் அக்டோபர் 2ம் தேதி 600 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.