சென்னை: அண்ணா பல்கலை.யில் பகவத்கீதை பாடத்தை விருப்பப்பாடமாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பகவத்கீதையை விருப்பப்பாடமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, தொழில்நுட்பக் கல்வி கழகம் பரிந்துரையில் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த பாடத்தில் சமஸ்கிருத பிரிவு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.