பழநி: திருப்பதி பிரமோற்சவத்திற்காக பழநியில் இருந்து 7 டன் பூக்கள் பஸ் மூலம் அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில், திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு கடந்த 17 ஆண்டுகளாக பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி பிரமோற்சவத்திற்காக 10 நாட்களுக்கு சுமார் 7 டன் பூக்கள் இவ்வமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நேற்று கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து தலைமை வகிக்க, செயலாளர் மருதசாமி முன்னிலை வகித்தார்.