மாணவி மீது ஆசிட் வீசிய மாணவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சிதம்பரம்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறையில் படித்த மாணவி ஒருவர் மீது கடந்த 9ம் தேதி சக மாணவன் ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. மாணவி அளித்த புகாரின்பேரில்  அண்ணாமலைநகர் போலீசார், நாகையை சேர்ந்த முத்தமிழன்(23) என்பவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இவரின் கொடுஞ்செயலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் முத்தமிழனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.

Related Stories: