துரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (50). இவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (45) உள்பட 150க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்த சீட்டு கடந்த 2018ம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது பாண்டியம்மாள் யாருக்கும் பணம், இனிப்பு உள்பட எந்த பொருட்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீட்டு பணம் ₹9 லட்சத்துடன் பாண்டியம்மாள் மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார் (26), சசிக்குமார் (25) ஆகியோர் திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீட்டு பணம் கட்டியவர்கள் கருணாகரன் தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.