திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஓடும் பேருந்தில் ஒருவரை வெட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்துக்கொண்டிருந்த போது இன்னோவா கார் ஒன்று 10 பேர் கொண்ட கும்பலுடன் பேருந்தை வழிமறித்து, அந்த பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத நபரை, பேருந்திற்குள் வைத்து அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வெட்டப்பட்ட நபரை மீது செய்யாறு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.