சென்னை : குரூப் 2 தேர்வின் பாடம் திட்டம் மாற்றப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுநாள் வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதனிலை தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும். அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது.