சென்னை: பிராட்வேயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் பலியான விவகாரம் தொடர்பாக விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார். கூலி தொழிலாளியான இவர், தனது குடும்பத்துடன் பிராட்வேயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் பலத்த மழை பெய்தபோது அந்த வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்தது. இதில் சுரேஷ் குமாரின் 7 வயது மகன் ஆலன் உடல் நசுங்கி பலியானான். மனைவி கலைவாணி மற்றும் மகள் ஏஞ்சல் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நேற்று காலை நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆஜராகி, பிராட்வேயில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.