சென்னை: நிலத்தை விற்பனை செய்ய கிரய ஒப்பந்தம் செய்து, 18 லட்சம் மோசடி செய்த இருவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹரிஹந்த்கோத்தி (56). இவரிடம், பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மகன் பிரதாப், லோகேஷ், உறவினர் ராமகோவிந்தன், அவரது மகன் நரேஷ் ஆகியோர், தங்களுக்கு சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி, கடந்த 2006ம் ஆண்டு, கிரைய ஒப்பந்தம் செய்து, 18 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால், ஒப்பந்தப்படி நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல், கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர்.