சென்னை: சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஹஜ் சார்பில் அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. இதில் சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் அசூப், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபுபக்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் ஹஜ் அமைப்பின் தலைவர்கள், செயல் அதிகாரிகள், வெளியுறவு துறை, சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அபுபக்கர் பேசியதாவது: இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள பற்று, பாசம் காரணமாக தமிழக அரசு ஹஜ் பயணத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மானியம் அளித்து வருகிறது. இந்தியாவிலேயே இத்தகைய மானியம் தரும் ஒரே அரசு தமிழகம் மட்டும்தான்.