தண்டையார்பேட்டை: பாரிமுனையில் கடல் குதிரைகள் பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாக, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் தனிப்படை போலீசார், மேற்கண்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் பரூக் (53) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, 4 மூட்டைகளில் 75 கிலோ எடையுள்ள கடல் குதிரைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.