சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 198 கோடி செலவில் வில்லிவாக்கம், இந்திரா நகர், ராயபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், சென்னை வில்லிவாக்கம் திட்ட பகுதியில் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் “பி”, “சி” மற்றும் “டி” பிரிவு அரசு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ், 1.47 ஏக்கர் நிலத்தில், 71 கோடியே 71 லட்சம் செலவில், 324 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு படுக்கை அறை, கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், சூரிய மின்சக்தி இணைப்பு, மின்தூக்கி, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.