சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், மாநகராட்சி பொறியாளர்களிம் விசாரணை நடத்த தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் இல்ல நிகழ்ச்சிக்கு சாலை நடுவே வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் சட்ட விரோதமாக பேனர் வைத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் ெதரிவித்தது.