எழுத்தாளர் கி.ரா. துணைவியார் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் துணைவியார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கரிசல் மண்ணின் மகத்தான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் துணைவியார் கணவதி அம்மாள் மறைவுற்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கி.ரா.வின் சொந்த ஊரான இடைச்செவல் தொடங்கி அவர் பணியாற்றிய புதுச்சேரி வரை, தமது வாழ்க்கைப் பயணத்தில் எந்நாளும் தமக்கு துணை நின்ற தமது துணைவியார் மறைவினால் பேரிழப்பைச் சந்தித்துள்ளார். கி.ரா.வுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: