சென்னை: ‘‘நீர் பங்கீடு குறித்து கேரள அரசுடன் சுமூகமான ஆலோசனை நடந்தது’’ என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு நேற்று இரவு வந்த முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள நீர் பங்கீடு குறித்து இருமாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நீராறு, கல்லாறு, ஆணைமலையாறு, சிறுவாணி ஆற்றுப்பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதோடு பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தின் நிலை குறித்து விவாதிக்கப்டட்து. நெய்யாற்றிலிருந்து விளவங்கோடுக்கு செல்லும் நீர் தொடர்ந்து வழங்கவேண்டும் என விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டம் சுமூகமாக நடந்தது. இருமாநிலங்களும் குழு அமைத்து, விரிவான அறிக்கை தந்த பிறகு விவசாயிகளும், பொதுமக்களும் நன்மை பயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.