சென்னை: ரயில் நிலையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ரயில்வே துறை பல சிறப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே பாதுகாப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். ரயில்வே பாதுகாப்புத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பி.எம்.நாயர் மற்றும் ரயில்வே பாதுகாப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் தமிழக ரயில்வே பாதுகாப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.