சென்னை: தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் இன்று கோட்டையை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்துத்துறை ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கர்சன், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 46 மாதங்களாக டிஏ வழங்கவில்லை. பென்ஷன் தொகை ஒவ்வொரு மாதமும் தாமதமாக தான் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்று தான் பெற வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ ரீதியாக ஓய்வு வழங்கப்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.